ஆப்நகரம்

TET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு!

Teacher Eligibility Test எனப்படும் டெட் தேர்வு (TET Exam) தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை TN TET UnQualified Teachers சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Dec 2019, 12:23 pm
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Samayam Tamil TN Govt School


தமிழகத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 23 ஆகஸ்ட் 2020 முதல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிச்சு பாருங்க:

தற்போதைய நிலவரப்படி சுமார் 1,747 ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சி பெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அத்தகைய ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை, நாளை (டிச.20) மாலை 3 மணிக்குள் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி