ஆப்நகரம்

பள்ளி மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் ஏற்பட புதிய திட்டம்

மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Samayam Tamil 13 Oct 2018, 8:13 pm
சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்கள் பெயரில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத வங்கி மற்றும் தபால் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட உள்ளன.
Samayam Tamil Good-Saving-Habits-for-Kids-e1533656687503.


இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவ, மாணவிகள் பெயரில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியம் இல்லாத சேமிப்புக் கணக்கு தொடங்க, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் 5 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒவ்வொரு பள்ளியிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

அடுத்த செய்தி