ஆப்நகரம்

ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகம் கிடைக்கும்: செங்கோட்டையன் உறுதி

பள்ளி மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்கள் மழையால் சேதமாகியிருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Samayam Tamil 18 Nov 2018, 3:52 pm

ஹைலைட்ஸ்:

இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil sengottaiyan_710x400xt
பாடப்புத்தகங்கள் சேதமடைந்தால் ஒரு வாரத்திற்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கொடுத்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர், கஜா புயலால் சேதமடைந்த பள்ளிகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்கள் மழையால் சேதமாகியிருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி