ஆப்நகரம்

பொறியியல் படிப்பில் பொதுப்பரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஆன்லைன் கலந்தாய்வு என்பாதல் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். அல்லது அரசு அமைத்துள்ள 46 மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Samayam Tamil 3 Jul 2019, 11:35 am
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.
Samayam Tamil 61322


தமிழகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆரம்பிக்கிறது. இந்தக் கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 9,872 வரை உள்ள இடங்களைப் பெற்ற மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆன்லைன் கலந்தாய்வு என்பாதல் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு சுற்றுகளாக இந்த ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய இன்று முதல் 10ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் உள்ளது.

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை

வரும் ஜூலை 11ஆம் தேதி மாணவர்களுக்கான இடங்கள்ள ஒதுக்கீடு செய்யப்படும். ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேருவது குறித்து அந்தந்த மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதிக்குள் உறுதிபடுத்த வேண்டும்.

ஜூலை 13ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் இறுதி செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கெடுக்கலாம்.

இன்று தொடங்கும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி வரை நடைபெறும்.

அடுத்த செய்தி