டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிட தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, செப்டம்பர் 8ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், இணையதளத்தின் சர்வர் டவுன் ஆகி,
மெதுவாக இயங்க நேரிட்டது.
இதுதொடர்பாக, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இதையேற்று, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி., நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், கட்டணம் செலுத்த 16ம் தேதி கடைசி நான் என்றும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, செப்டம்பர் 8ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், இணையதளத்தின் சர்வர் டவுன் ஆகி,
மெதுவாக இயங்க நேரிட்டது.
இதுதொடர்பாக, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இதையேற்று, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி., நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், கட்டணம் செலுத்த 16ம் தேதி கடைசி நான் என்றும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.