ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான கால கெடு டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNN 9 Dec 2016, 5:11 pm
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான காலக்கெடு டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tnpsc group 1 examination appilication deadline extented to december 12
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வு, துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 85 பதவிகளுக்கு 3 கட்டமாக நடைபெறுகிறது.

துணை ஆட்சியர் - 29, டி.எஸ்.பி - 34, துணை ஆணையர் - 8, மாவட்ட பதிவாளர் - 1, தீயணைப்பு அதிகாரி - 8, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் - 5 என மொத்தமாக 85 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த பணிகளுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய டிசம்பர் 8-ம் தேதி கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.ஆனால் கடைசி நாளில் அதிக நபர்கள் விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் குவித்ததால் இணையதளம் மிக மெதுவாக செயல்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து டிஎன்பிஎன்ஸ் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால கெடுவை டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது, மேலும் இந்த தேர்வுக்கான கட்டணங்களை செலுத்த டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

TNPSC Group 1 examination appilication : deadline Extented to december 12

அடுத்த செய்தி