ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: வரும் 21ஆம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 நேர்முகத் தேர்விற்கான கலந்தாய்வு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 16 Nov 2016, 6:26 am
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tnpsc group 2 direct counselling starts on nov 21st
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: வரும் 21ஆம் தேதி கலந்தாய்வு தொடக்கம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேர்காணல் தேர்வு அற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான காலிப் பணியிட அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் - 2016ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூலை - 2016ல் நடந்தது.

இந்நிலையில் வரும் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை, சென்னையில் உள்ள தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பதிவெண் பட்டியல், கால அட்டவணை பட்டியல் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு வருவோர் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவர்.

TNPSC Group 2 direct counselling starts on Nov 21st.

அடுத்த செய்தி