ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; இன்றே கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப். 8) கடைசி நாளாகும்.

TNN 8 Sep 2016, 10:08 am
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப். 8) கடைசி நாளாகும்.
Samayam Tamil tnpsc group 4 exam today is the last date to apply
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; இன்றே கடைசி நாள்!


இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்று இறுதி நாளாகும். மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும்.
இதனால், டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கும் அளவுக்கு, இணைய நெரிசல் ஏற்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்தவர்கள், குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விவரம்: நவம்பர் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும்.

தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி