ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் வகையில், இன்ஜினியரிங் படிப்புக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், இனி இன்ஜினியரிங் முடித்தவர்களும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றலாம். தமிழக பள்ளிகளில் ஆசிரயர் பணி புரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligiblity Test –TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பி.எட் எனப்படும் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, ஆசிரியராக பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
முன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள், இன்ஜினியிரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வமில்லாமல் இருந்தது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால், பி.எட் கல்லூரிகளில் பி.இ முடித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 20 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், இன்ஜினியரிங் படிப்பானது, டெட் தேர்வு எழுதவதற்கு சமநிலை அந்தஸ்து பெறாமல் இருந்தது. இதன் காரணமாக இன்ஜினியிரிங் முடித்துவிட்டு, பி.எட் படித்திருந்தால் கூட டெட் தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், தற்போது இன்ஜினியரிங் படிப்புக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பி.இ இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களும் டெட் தேர்வு எழுதி, ஆசிரியர் பணியில் சேரலாம். அவர்கள்6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் கணிதம் பாடம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை.யில் உதவியாளர், கிளார்க் பணிகள்.. பி.இ, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
முன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள், இன்ஜினியிரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வமில்லாமல் இருந்தது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால், பி.எட் கல்லூரிகளில் பி.இ முடித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 20 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், இன்ஜினியரிங் படிப்பானது, டெட் தேர்வு எழுதவதற்கு சமநிலை அந்தஸ்து பெறாமல் இருந்தது. இதன் காரணமாக இன்ஜினியிரிங் முடித்துவிட்டு, பி.எட் படித்திருந்தால் கூட டெட் தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், தற்போது இன்ஜினியரிங் படிப்புக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பி.இ இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களும் டெட் தேர்வு எழுதி, ஆசிரியர் பணியில் சேரலாம். அவர்கள்6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் கணிதம் பாடம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை.யில் உதவியாளர், கிளார்க் பணிகள்.. பி.இ, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!