ஆப்நகரம்

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

Samayam Tamil 1 Jun 2018, 9:44 am
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
Samayam Tamil anna-university_650x400_51509962450
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இந்தாண்டு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மே 3-ஆம் தேதி முதல் மாணவர்கள் இணையதளம் மூலமாக பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வந்தனர்.

அந்தவகையில் இதுவரை, 1 லட்சத்து 40 ஆயிரத்து மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜுன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜுன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்‍கு 044-22359901 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்‍கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி