ஆப்நகரம்

பள்ளி படிப்பை நிறைவு செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம்!

இந்தியாவிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இரண்டாம் இடத்தில் ஹிமாச்சல் பிரதேசமும், மூன்றாம் இடத்தில் கேரளா, மராட்டியமும் உள்ளது.

Samayam Tamil 5 Jun 2019, 12:31 pm
இந்தியாவிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இரண்டாம் இடத்தில் ஹிமாச்சல் பிரதேசமும், மூன்றாம் இடத்தில் கேரளா, மராட்டியமும் உள்ளது.
Samayam Tamil school education 12


இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி செய்யப்படுகிறது. இதன்பிறகு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில், தேர்வில் தோல்வி, வறுமை என பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தங்களுடைய பள்ளி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இது பள்ளி இடைநிற்றல் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலேயே பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக U.D.I.S.E தெரிவித்துள்ளது. யு.டி.ஐ.எஸ்.இ என்பது கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை ஆகும். இது நடத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் 86.2% பேர் பள்ளிப்படிப்பை முழுமை செய்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வாறு அதிக சதவிகிதம் உள்ளது. இதற்கு அடுத்ததாக இரண்டாம் இடமாக ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 85.8% பேர் பள்ளிபடிப்பை நிறைவு செய்கின்றனர். மூன்றாம் இடத்தில் (85.6%) கேரளா, மாரட்டிய மாநிலம் உள்ளது.

முன்னதாக தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மூன்று பிரிவுகளாக யு.டி.எஸ்.சி.இ ஆய்வு செய்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 100 மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், தொடக்கப்பள்ளிகளில் 94 பேரும், நடுநிலைப்பள்ளிகளில் 75 பேரும், மேல்நிலைப்பள்ளிகளில் 70 பேரும் படிப்பை முழுமை செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறப்படுகிறது. வகுப்பு வாரியாக பார்க்கும் போது, எஸ்.சி – 65%, எஸ்.டி. – 61%, ஓ.பி.சி – 73%, பொது – 74% என்ற அளவில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த செய்தி