ஆப்நகரம்

நீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்! நீதிமன்றம் கருத்து

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சராமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

Samayam Tamil 15 Oct 2019, 1:09 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil neet udit surya


நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகு மனஉளைச்சல் ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் இருந்து விலகி விட்டேன். அதன்பிறகு தான் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

உதித்சூர்யாவின் இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரத்தில், மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கினால், மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க நேரிடும். இதனால் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை பாதிக்கப்படும். எனவே, மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடினர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுக்காதது ஏன். உண்மையான வில்லன், உதித் சூர்யாவின் தந்தை தான் என்று கூறினர்.மேலும், மன்னிக்க முடியாத குற்றம் நடந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், மாணவர் உதித்சூர்யாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அடுத்த செய்தி