ஆப்நகரம்

இனி வெறும் 3 பல்கலை.யில் மட்டுமே தொலைநிலைக் கல்வி!

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளின்படி, இனி தமிழகத்தில் வெறும் 3 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

Samayam Tamil 19 Apr 2018, 5:40 am
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளின்படி, இனி தமிழகத்தில் வெறும் 3 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
Samayam Tamil ugc


உயர்கல்வியை மேம்படுத்தவும் தொலைநிலைக்கல்வியை கட்டுப்படுத்தவும் பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, நாக் எனப்படும் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) அங்கீகாரம் பெற்று, குறைந்தபட்சம் 3.26 என்ற புள்ளிகள் பெற்ற பல்கலைக்கழகத்தில் மட்டுமே தொலைநிலைக்கல்வியை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே நாக் கமிட்டியினால், 3.26 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளது. இதனால் இந்த மூன்று பல்கலைக்கழகங்களில் மட்டுமே 2018ம் ஆண்டு தொலைநிலைக்கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்று உருவாகியுள்ளது.

மேலும், அந்த வகையில், நாடு முழுவதும் வெறும் 40 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக்கல்வி வழங்கும் சூழல் உள்ளது.

இருந்தபோதிலும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.26 என்ற நாக் புள்ளிகளை, 3 ஆக குறைக்க வேண்டும் என்றுதமிழக உயர்கல்விதுறை சார்பில், யுஜிசிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி