ஆப்நகரம்

மேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை மாணவர்களே திருத்தலாம்!

மேற்கு வங்காள மாநிலத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள்களை தாங்களே திருத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 22 Feb 2020, 4:24 pm
மேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை மாணவர்களை திருத்துவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil West Bengal Board Exam


மேற்கு வங்காளத்தில் கல்வித்தரம், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் விதமாக, மாநில கல்வித்துறையில் கடந்தாண்டு புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள்களை, தாங்களே திருத்திக் கொள்ளலாம்.

12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு 2019-20 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 12 முதல் மார்ச் 27 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது விடைத்தாள்களை திருத்த விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 28க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பி.இ படிக்க கெமிஸ்டரி தேவையில்லை: AICTE முடிவு

பொதுத்தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்களை திருத்துவதற்கு ஜூலை 5 ஆம் தேதி, வித்யாசாகர் பவன் எனப்படும் தேர்வுத்துறை இயக்குநனரகத்துக்கு அழைக்கப்படுவர். செல்போன், பேனா எதுவும் மதிப்பீடு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. விடைத்தாள்கள் மதிப்பீடு முடிந்ததும், ஒரு சில வாரங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.மேற்கு வங்காளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடைமுறைக்கு மாணவர்கள், பெற்றோர்கள் த்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி