ஆப்நகரம்

டெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெரும்பாலானோர் தோல்வியடைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2019, 7:22 pm
கடந்த ஜூன் மாதம் நடத்திப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தேர்வில் வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பதாரர்களே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் தோல்வியடைந்துள்ளனர்.
Samayam Tamil minister sengottaiyan


ஏற்கனவே அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரயர்களாக பணியாற்றும் 1,500 பேரில் மிகக்குறைந்த ஆசிரியர்கள் தான் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதனால், தேர்ச்சி பெறாதவர்கள் வேலை இழக்கும் அபாயத்தை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய பாடத்திட்டம் என்பால், டெட் தேர்வில் தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் எங்களுக்கு போதுமான அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆசிரியர் தேர்வு என்பது கூடுதல் தகுதி தான். தரம் என்பது இல்லை.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமனம் செய்து கொள்ளலாம். அத்தகைய தற்காலிக ஆசிரியர்கள் விபரங்களை பள்ளிகள் எங்களுக்கு அனுப்பினால், தற்காலிக ஆசிரியர்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை அரசே வழங்கிவிடும்’. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அடுத்த செய்தி