ஆப்நகரம்

தாய்மொழி படித்தால் வாழ்க்கையில் வெல்லலாம்

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே தாய்மொழி கற்பித்தல் மிகமுக்கியம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் மொழிப்பாடங்களை குழந்தைகள் நன்கு பயின்றால்தான் மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Mar 2019, 7:30 pm
பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே தாய்மொழி கற்பித்தல் மிகமுக்கியம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் மொழிப்பாடங்களை குழந்தைகள் நன்கு பயின்றால்தான் மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil


வாஷிங்டன் பல்கலை.,யில் நடந்த ஆய்வில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாகப் படித்து முன்னேற அவர்களுக்கு தாய்மொழி குறித்த அறிவு மிகவும் அவசியம் என மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். ஏர்லி சைல்ட்ஹுட் ரிசர்ச் குவாட்டர்லி (Early childhood research quarterly) என்ற கல்வி இதழில், இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் 1,3, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்களது பாடப்பிரிவு ஆர்வம் ஆகியவை கணக்கிடப்பட்டது. இதன்படி கணிதம், அறிவியல் ஆகியவற்றை நன்றாகப் படிக்க உதவுவது மொழிப்படம் எனத் தெரியவந்துள்ளது. மொழிப்படங்களில் உள்ள இலக்கணங்களை நன்கு பயின்றால்தான் மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற முடியும். மொழிப்படங்களில் அதிக ஆர்வம் காட்டும் மாணவர்களே பின் நாட்களில் மற்ற பாடங்களை சுலபமாக புரிந்துகொண்டு முதல் மதிப்பெண் பெறுகின்றனர் என ஆய்வு மேற்கொண்ட நிபுணர்களின் ஒருவரான ஏமி பேஸ் தெரிவித்துள்ளார்.

கணிதம், இயற்பியல் போன்ற சிக்கலான கணக்குகள் கொண்ட பாடத்தில் உள்ள லாஜிக்குகளை மொழியறிவை வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள், உடனடியாக புரிந்து கொள்கின்றனர் என இந்த ஆய்வு கூறுகிறது. ஆகவே குழந்தைகளிடம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஃபிரஞ்ச் உள்ளிட்ட மொழிகளின்பால் ஆர்வத்தை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரது கடமை.

அடுத்த செய்தி