ஆப்நகரம்

கோவில்பட்டியில் துடைப்பம் வியாபாரியிடம் ரூ. 4 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டி அருகே துடைப்பம் வியாபாரம் செய்பவரிடம் இருந்து ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

TOI Contributor 28 Apr 2016, 11:15 pm
கோவில்பட்டி அருகே துடைப்பம் வியாபாரம் செய்பவரிடம் இருந்து ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டத
Samayam Tamil election officers have seized rs 4 lakh from broomstick seller
கோவில்பட்டியில் துடைப்பம் வியாபாரியிடம் ரூ. 4 லட்சம் பறிமுதல்


கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வேல்மயில் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது நாலாட்டின்புதூர் சிவன் கோவிலை சேர்ந்த சுப்பையாவின் மகன் ஜீவாகண்ணன் வந்த பைக்கை சோதனையிட்டனர். துடைப்பம் வியாபாரியான ஜீவாகண்ணனின் பைக்கில் ரூ.4 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்திய போது தான் வீடு கட்டிவருவதாகம், அதற்கு பணம் தேவைப்பட்டதால் கழுகுமலையில் உள்ள தனது சகோதிரியிடம் பணத்தினை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். .ஆனால் அதிகாரிகள் உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அந்த பணத்தினை பறிமுதல் செய்து தாலூகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கேரள மாநில வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி