ஆப்நகரம்

நாளை மறுநாள் முதல்கட்டத் தேர்தல்; சட்டீஸ்கரில் ஏற்பாடுகள் தீவிரம்!

ராய்பூர்: சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 10 Nov 2018, 1:17 pm
சட்டீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் வரும் ஜனவரி 5, 2019 உடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Chhattisgarh


மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டத் தேர்தல் 18 தொகுதிகளுக்கு மட்டும், வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் 16ல் தொடங்கி, 23ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அக்டோபர் 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அக்டோபர் 26ஆம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுவதால், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக வாக்குச் சேகரித்து வருகின்றன.

இரண்டு கட்டத் தேர்தல்களும் முடிவடைந்த பின்னர், வரும் டிசம்பர் 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்