ஆப்நகரம்

Delhi Assembly Elections: 28 வாக்குறுதிகள் என்னனு தெரியுமா?- சரவெடியாய் களமிறங்கிய ஆம் ஆத்மி!

சட்டமன்ற தேர்தலை ஒட்டி 28 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Feb 2020, 11:50 am
தலைநகர் டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி உத்தரவாதம் அளிக்கும் 10 விஷயங்கள், மேம்பாட்டிற்கான 28 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
Samayam Tamil AAP Manifesto


இதில் மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம், இலவசங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அடிப்படையான விஷயங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி பாடத்திட்டத்தில் தேச பக்தியை வளர்க்கும் வகையில் பாடங்கள் இடம்பெறும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் மூத்த குடிமக்கள் புனித தலங்களுக்கு சென்று வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நமஸ்தே நான் அரவிந்த் கெஜ்ரிவால்... பிரசாந்த் கிஷோரின் நூதன பிரசார யுக்தி!

இந்த தேர்தல் அறிக்கையில் டெல்லி ஜன் லோக்பால் மசோதா, டெல்லி ஸ்வராஜ் மசோதா மற்றும் நீண்ட கால கோரிக்கையான டெல்லிக்கு முழு மாநில அதிகாரங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்குதல், ஆற்றங்கரையோரப் பகுதிகளின் மேம்பாடு, நகரில் 24x7 நேரமும் மார்க்கெட் வசதி, போஜ்புரி மொழிக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவை வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.

டெல்லியை தூய்மையாக வைத்திருக்க அதிகப்படியான துப்புரவு பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்படுவர். இவர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் சிஏஏ பற்றி எந்தவொரு விஷயமும் இடம்பெறவில்லை. இது அனைத்து சமூகப் பிரிவினர், அனைத்து வித தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையிலும் தலைநகரை மேம்படுத்தப்படும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சினைகள் களையப்பட்டுள்ளன.

எனக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த நபர் - மருத்துவர்கள் பயங்கர ஷாக்!

அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். டெல்லியை 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப உயர் தரத்தில், சீரான செயல்பாட்டிற்கு ஏற்ற தலைநகராக மாற்றுவோம். இதற்காக மத்திய அரசு மற்றும் டெல்லி மக்களின் ஒத்துழைப்புடன் அரசு செயல்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி