ஆப்நகரம்

இப்படியொரு அதிர்ச்சியே தீவிர அரசியல்வாதி ஆக்கியது- ஹேமந்த் சோரனின் சோகக்கதை!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஹேமந்த் சோரனின் சோகக்கதை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Dec 2019, 12:34 pm
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 மாத கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பின், கடந்த 2013ஆம் ஆண்டு முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹேமந்த் சோரன்.
Samayam Tamil Hemant Soren


சமீபத்தில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி முகம் கண்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அமர்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஆதிவாசி தலைவர்களில் ஒருவர் ஷிபு சோரன்.

தேசிய குடிமக்கள் பதிவேடா? அதெல்லாம் அமல்படுத்த முடியாது - நிராகரித்த முதல்வர்கள்!

இவரது மகன் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக வரும் 27ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தனது மூத்த சகோதரர் துர்கா கடந்த 2009ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததை அடுத்து தீவிர அரசியல்வாதியாக மாறியதாக ஹேமந்த் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியில் தனக்கு பிறகு அரசியல் வாரிசாக மூத்த மகன் துர்காவை ஷிபு சோரன் உருவாக்கி கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டடக் கலை வடிவமைப்பு பணியில் ஹேமந்த் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

தினமும் 600 பேரின் உயிரைப் பறிக்கும் சாலை விபத்து

இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிட் மெஸ்ராவில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பயின்றார். ஆனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஹேமந்த் மிகுந்த ஏமாற்றத்தில் தான் இருந்தார்.

2000ஆம் ஆண்டு நிர்சா தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஹேமந்திற்கு தந்தை ஷிபு அனுமதி தரவில்லை. 2005ஆம் ஆண்டு தும்கா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

2009ஆம் ஆண்டு தனது சகோதரர் உயிரிழந்த பிறகு, தும்கா தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை வெற்றி பெற்றார். ஜூன் 2009 முதல் ஜனவரி 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 8 மாதங்களுக்கு பிறகு அர்ஜூன் முண்டா அரசில் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தடுப்பு மையம்: உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன?

ஜூலை 2013ல் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை ஹேமந்த் சோரன் பெற்றார். 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக -ஏ.ஜே.எஸ்.யூ கூட்டணி ஆட்சியை பிடித்தது.

அப்போது தும்கா தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கிறார்.

அடுத்த செய்தி