ஆப்நகரம்

93 வருடங்களாக தேர்தலில் வாக்களிக்கும் சிவக்குமார சுவாமிகள்!!

இன்று நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில், 111 வயதான சிவக்குமார சுவாமிகள், தனது வாக்கை வாக்குச்சாவடியில் செலுத்தியுள்ளார்.

Samayam Tamil 12 May 2018, 11:42 am
இன்று நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில், 111 வயதான சிவக்குமார சுவாமிகள், தனது வாக்கை வாக்குச்சாவடியில் செலுத்தியுள்ளார்.
Samayam Tamil 93 வருடங்களாக தேர்தலில் வாக்களிக்கும் சிவக்குமார சுவாமிகள்!!
93 வருடங்களாக தேர்தலில் வாக்களிக்கும் சிவக்குமார சுவாமிகள்!!


கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக சார்பில் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவும், காங்கிரஸ் சார்பில் தற்போதைய கர்நாடக முதல்வர் சித்த ராமையாவும் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, கடந்த சில மாதங்களாக பாஜக கட்சியின் மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் மே 10 ஆம் தேதி மாலையுடன் முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தும்கூர் சித்தகங்கா மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சிவகுமார சுவாமிகள், தனது 111 வது வயதில் ஓட்டுப் போட்டுள்ளார். இவர் சித்தகங்கா மடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தியுள்ளார். ஸ்ரீ சிவகுமார சுவாமிகள், தனது 18 வயதிலிருந்தே தேர்தலில் வாக்களித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்க வந்த பழம்பெரும் நடிகை லீலாவதி

இது தவிர, பழம்பெரும் நடிகையான லீலாவதி, தனது மகன் வினோத் ராஜுடன் பெங்களூரில் உள்ள நீலமங்களா வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி