ஆப்நகரம்

தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகே கூட்டணி அறிவிப்பு: தேவகவுடா

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2018, 10:07 am
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deve_gowda-644x362
தேவ கவுடா, மஜத தலைவர்


கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக- 106, காங்கிரஸ்- 67 மற்றும் மஜத- 44 ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

குழப்பமான முடிவுகளால், கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசியல் ஸிதிரத்தன்மையற்ற நிலையால் கர்நாடகாவின் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.

தேர்தல் முடிவிகளில் இதே நிலை தொடர்ந்தால், கர்நாடகாவில் கிங் மேக்கராகமதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உருவாகும். மஜத எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சி கர்நாடாகவில் ஆட்சிக்கு வர வாய்ப்பு ஏற்படும்.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியான பிறகே, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி