ஆப்நகரம்

Karnataka Bypolls: கர்நாடகாவில் நாளை மறுதினம் இடைத்தேர்தல்; பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகல்

நாளை மறுதினம் கர்நாடகாவில் இடைத்தேர்தல் உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து திடீரென விலகி பாஜக.,வின் காலை வாரியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 4:21 pm
பெங்களூரு : கர்நாட்கா சட்டமன்ற இடைத்தேர்தல் ராம்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் திடீரென போட்டியிலிருந்து விலகி அதிருப்தி அடைய செய்துள்ளார்.
Samayam Tamil L-chandrashekhar-ramanagara


கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை தொகுதிகள் ராம்நகர், ஜமாகண்டி ஆகியவற்றிற்கு நாளை மறுதினம் (நவம்பர் 3) நடைபெறுகிறது. இதேபோல் காலியாக உள்ள மக்களவை தொகுதிகளான ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகியவற்றிற்கும் நவம்பர் 3ஆம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இவற்றின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

பாஜக வேட்பாளர் விலகல் :
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக கட்சியில் இணைந்த எல். சந்திரசேகருக்கு ராமநகரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்கள் மட்டும் பாக்கியுள்ள நிலையில், பாஜக மாநில தலைமையை சேர்ந்தவர்கள் தன்னை ஒதுக்க நினைப்பதாகவும், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தன்னிடம் பேச மறுப்பதாக கூறி, இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எல். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரும், கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பாஜக தலைமை அதிருப்தியில் உறைந்துள்ளது.

அடுத்த செய்தி