ஆப்நகரம்

ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா; 7 நாட்கள் அவகாசம் வழங்கிய ஆளுநர்!

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.

Samayam Tamil 15 May 2018, 5:46 pm
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.
Samayam Tamil Yeddyurappa


கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் 75க்கும் மேற்பட்ட தொகுதிகளுடனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளுடனும் உள்ளனர். முழுமையான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் தனது ஆதரவை அளித்துள்ளது.

அதேசமயம் அதிக தொகுதிகளை பெற்றுள்ளதால், எங்களுக்கே ஆட்சியமைக்க வாய்ப்புத் தர வேண்டும் என்று ஆளுநர் மாளிகைக்கு எடியூரப்பா விரைந்தார். அங்கு ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சி அமைக்க 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆளுநரை சந்திக்கிறார்.

Karnataka Governor gives 7 days to form govt to Yeddyurappa.

அடுத்த செய்தி