ஆப்நகரம்

15 நாட்களுக்குள் பெரும்பாண்மை, இன்று மதியத்துக்குள் ஆதரவு கடிதம்; எடியூரப்பாவுக்கு கெடு

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்கும் நிலையில், ஆதரவு எம்எல்ஏ.,க்களின் கடிதத்தை இன்று மதியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2018, 6:31 am
கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்கும் நிலையில், ஆதரவு எம்எல்ஏ.,க்களின் கடிதத்தை இன்று மதியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil 065509_Yeddyurappa


கர்நாடகாவில் ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்க உள்ளார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பாண்மையை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கவர்னரின் இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் மஜத கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், நீதிமன்றம் காலை திறக்கும் முன்பே, எடியூரப்பா பதவியேற்கவுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

பின்னர், நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவிப்பு வெளியாகியது. அதன்படி சரியாக நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு, ஏகே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ. போப்தே ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காங்கிரஸ்-மஜத சார்பில் அபிஷேக் சிங்வி வழக்கறிஞர் வாதாடினார். இதே போல், மத்திய அரசு தரப்பில் கே.கே வேணுகோபால், கர்நாட பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில், காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர்களும், பாஜக தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக வாதாடினர்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று கூறியது. மேலும், இது குறித்து அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி முழுமையாக விசாரணை செய்யப்படும் என்றும் ஆனால், இன்று மதியம் 2.00 மணிக்குள் ஆதரவு எம்எல்ஏ.க்களின் கடிதத்தை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி