ஆப்நகரம்

சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?

கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பினராயி விஜயனின் மருமகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 4 May 2021, 9:27 pm
மொத்தம் 140 தொகுதிகளை கேரள மாநில சட்டமன்றத்துக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவை பொறுத்தவரை இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகளில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
Samayam Tamil பினராயி மகள் திருமணம்
பினராயி மகள் திருமணம்


தங்கக்கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் தாண்டி இரண்டாவது முறையாக அவர் ஆட்சியை பிடித்திருக்கிறார். கேரளாவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது ஒதுவே முதல் முறையாகும். இந்த பெருமைகள் அனைத்தும் பினராயி அரசையே சாரும்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனனின் கணவர் முகமது ரியாசும் வெற்றி பெற்றுள்ளார். சிபிஎம்-இன் இளைஞர் அமைப்பான dyfi-இன் தேசியத் தலைவராக இருக்கும் இவர் மாநில அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள போதும், சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக தற்போதுதான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்ட அவர், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் முகமது ரியாஸ் வெற்றி பெற்றுள்ளதால், மாமனாரும், மருமகனும் இணைந்து சட்டமன்றத்துக்கு செல்லவுள்ளனர். அத்துடன், கட்சியின் கட்டுப்பாடு காரணமாக கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர்களான பலருக்கு இம்முறை வாய்ப்பளிக்கவில்லை, மேலும், அமைச்சர்களாகும் வாய்ப்பை பெற்றிருந்த சில சீனியர்களும் தோல்வியுற்றுள்ளதால், அம்மாநிலத்தில் அமைச்சர் பதவிகள் அதிகமாக இருக்கிறது.

இந்த பதவிகளுக்கு பலரும் ரேஸில் இருக்கிறார்கள். ஆனால், கேரள மாநில சிபிஎம் இம்முறை இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதே முறை சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருந்தால், அதில் முதலாவதாக இருப்பவர் பினராயி விஜயனின் மருமகன். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு போட சொல்லி பரிந்துரை!
அதேசமயம், அரசியலில் நீண்ட அனுபவம் இருந்தாலும், அவருக்கு வாய்ப்பளித்தால் பினராயி விஜயனின் மருமகன் என்கிற ஒரே காரணத்துக்காக விமர்சனங்களும் எழும் என்பதால், அமைச்சர் பதவி தட்டி போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி