கேரளாவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு இடையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் சிபிஎம் முதல்வர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவை சகாக்கள் 11 பேர், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் அடங்குவர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன. அதேசமயம் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று UDF கூட்டணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
நானோ அல்லது எங்கள் கட்சியோ எக்ஸிட் போல் முடிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயம் எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்கும். கேரள அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் LDF மற்றும் UDF இடையிலான நேரடி போட்டியாகவே களம் அமைந்திருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக சிபிஎம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. LDF கூட்டணிக்கு 71 முதல் 77 இடங்கள் கிடைக்கும். UDF கூட்டணிக்கு 62 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு 71 இடங்கள் தேவை.
NDA கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் LDF 91 இடங்களையும், UDF 47 இடங்களையும், NDA மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின. இம்முறை LDF கூட்டணி சற்றே சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
நானோ அல்லது எங்கள் கட்சியோ எக்ஸிட் போல் முடிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயம் எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்கும். கேரள அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் LDF மற்றும் UDF இடையிலான நேரடி போட்டியாகவே களம் அமைந்திருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக சிபிஎம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. LDF கூட்டணிக்கு 71 முதல் 77 இடங்கள் கிடைக்கும். UDF கூட்டணிக்கு 62 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு 71 இடங்கள் தேவை.
NDA கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் LDF 91 இடங்களையும், UDF 47 இடங்களையும், NDA மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின. இம்முறை LDF கூட்டணி சற்றே சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.