ஆப்நகரம்

ம.பி., சட்டசபை தேர்தல்; 5 எம்.எல்.ஏக்களை புறக்கணித்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜக!

போபால்: பாஜக வெளியிட்டுள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் பெயர் புறக்கணிக்கப் பட்டுள்ளன.

Samayam Tamil 7 Nov 2018, 1:37 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 231 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநில சட்டசபையின் ஆயுட்காலம் விரைவில் முடிவுறுகிறது.
Samayam Tamil BJP


இதையொட்டி வரும் நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று, சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் 17 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் 5 பேரின் பெயர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 193 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.

மொத்தம் 41 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதேபோல் காங்கிரஸ் 171 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன. கடந்த 2013 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உறவினர் அனூப் மிஷ்ரா மற்றும் ஹரந்திரஜீத் சிங் பாபுவிற்கு பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

அதன்படி, குவாலியரின் பிதர்வார் தொகுதியில் மிஷ்ராவும், ஜபல்பூர் மேற்கு தொகுதியில் பாபுவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான லகான் சிங் யாதவ் மற்றும் தருண் பனோத் ஆகியோரிடம் முறையே 923 மற்றும் 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அமைச்சர் ஷரத் ஜெயினிற்கு பதிலாக வேறொருவரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜபல்பூர் வடக்கு தொகுதியில் மீண்டும் அவரே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்