ஆப்நகரம்

ராமா் கோவில்: நீதிமன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் தலையீடு – மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் தனது தரத்தை சுருக்கிக்கொண்டே வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 25 Nov 2018, 11:11 pm
ராமா் கோவில் – பாபா் மசூதி வழக்கில் காங்கிரஸ் கட்சி தலையிடுவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil Narendra Modi Speech


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகின்ற டிசம்பா் 7ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல்யொட்டி காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில், தோ்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தோ்ல்வியுற்றால், நீதிபதிகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்ற க்ணடனத் தீா்மானம் மூலம் அச்சுறுத்துகின்றனா்.

இது மிகவும் மோசமான விளையாட்டு. சட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கண்டனத் தீா்மானங்களை பயன்படுத்தி காங்கிரஸ் குற்றம் புரிகிறது. மக்களவையில் இருக்கும் பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் நாட்டை மீண்டும் அடிமைப் படுத்துகிறது.

காங்கிரஸ் முக்கியமான உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவை சீட்டுகளை வழங்கும். அவா்கள் எப்போதும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிறகு மாநிலங்களவைக்கு வருவாா்கள். மாநிலங்களவைக்கு எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதை அவா்கள் அணுகூலமாக எடுத்துக்கொள்கின்றனா். மாநிலங்களவையில் இருக்கும் அந்த காங்கிரஸ் உறுப்பினா்கள், வரவிருக்கும் தோ்தல்களை காரணம் காட்டி 2019 வரை இந்த வழக்கை தொடரக் கூடாது என்று உச்சநீதிமன்றத்திடம் தொிவிக்கின்றனா்.

காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் தனது தரத்தை சுருக்கிக்கொண்டே வருகிறது. வளா்ச்சி போன்ற உண்மை விகாரங்கள் குறித்து பேசுவதற்கு துணிவை காங்கிரஸ் இழந்துள்ளது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி