ஆப்நகரம்

ஸ்ருதிஹாசனை குறி வைத்து பாஜக புகார்!

பாஜகவினர் ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2021, 9:20 am
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று முடிவடைந்தாலும் பரபரப்பு மட்டும் குறைந்தபாடில்லை. புகார்கள், மோதல்கள் என களம் இன்னும் சூடாகவே உள்ளது. இதில் ஒரு புகார் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனை நோக்கி வந்துள்ளது.
Samayam Tamil Sruthi haasan


சென்னையில் நேற்று காலை தனது இரு மகள்களுடன் சென்று வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து பறந்து தான் வேட்பாளராக களமிறங்கியுள்ள கோவை தெற்கு தொகுதிக்கு சென்றார்.

அதிகரிக்கும் கொரோனா: அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் - இதெற்கெல்லாம் தடை!

வேட்பாளர் என்ற முறையில் வாக்குச் சாவடிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது தனது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனை அழைத்துச் சென்றது சர்ச்சையாகியுள்ளது. வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்த போது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தது விதிமீறல் என்பதால் அவர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை: வெளியானது அசத்தல் அறிவிப்பு!
இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக தலைமை ஏஜென்ட் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் விதிமுறை மீறல் படி ஸ்ருதிஹாசன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி