ஆப்நகரம்

ஸ்டாலினை முந்திய எடப்பாடி: இதென்ன புது கணக்கா இருக்கு!

தேர்தல் பிரச்சாரக் களத்தில் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2021, 10:02 am
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று (ஏப்ரல் 6) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil mk stalin eps


தொலைக்காட்சிகளில் ஓயாமல் ஒலித்து வந்த விளம்பரங்களும் ஓய்ந்து மக்களும் இப்போது ரிலாக்ஸ் மூடில் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தெருக்களையும் சல்லடை போட்டு சலித்துள்ளனர்.
இந்த நம்பர் மாறாது: அத்தனை கருத்துக் கணிப்புகளும் சொல்வது இதுதான்!
பல வாரங்களாக கட்சித் தலைவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார். அதே போல் புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் வாக்கு கேட்டார்.

இந்நிலையில் கடந்த 21 நாட்களில் மு.க.ஸ்டாலின் 70 கூட்டங்களில் பேசியிருக்கிறார். இதற்காக 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். அதேசமயம் அதிமுக ஆட்சியை பல்வேறு வகைகளில் விமர்சித்துப் பேசினார்.

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு: 7ஆம் தேதி முதல் இதெற்கெல்லாம் சிக்கல்!
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சுமார் 250 இடங்களில் மக்களிடம் பேசியுள்ளார்.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அடுத்த கல்வி ஆண்டும் ஆல்பாஸ் - அமைச்சர் உறுதி!

இரு தரப்பு பேச்சுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் யாரை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி