ஆப்நகரம்

பெர்பாமன்ஸ் பண்ண விடுங்கடா: இபிஎஸ் மைன்ட் வாய்ஸ்! மொரப்பூரில் நடந்தது என்ன?

தேர்தல் பரப்புரையில் தொண்டர் ஒருவர் எதிர் கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார் முதல்வர் பழனிசாமி.

Samayam Tamil 23 Mar 2021, 12:12 pm
அரூர் அருகே தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது தொண்டர் ஒருவர் தர்மபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம் மற்ற மாவட்டங்கள் அனைத்தும் செழிப்பாக உள்ளது என ஆக்ரோசமாக பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Samayam Tamil eps election campaign


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, காரிமங்கலம், மொரப்பூர் ஆகிய பேருந்து நிலையங்கள் அருகே தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அரூர் சட்டன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
மீண்டும் பொது முடக்கமா? மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை!
அப்போது பிரச்சார கூட்டத்தில் இருந்த அதிமுக கட்சி தொண்டர் ஒருவர் அனைத்து மாவட்டமும் செழிப்பாக உள்ளதாகவும், தருமபுரி மாவட்டம் மட்டும் வறட்சியாக உள்ளது என கடுமையான பேசினார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தேர்தலை எப்படி நடத்துவது?
இதை கேட்ட தமிழக முதல்வர் பழனிசாமி சிறிது நேரம் தன் உரையை நிறுத்தினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து இதற்கு பதில் அளித்த அவர், மொரப்பூரில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டம் அருமையான கூட்டம். இதுபோன்ற கூட்டங்களில் கலாட்டா நடக்கும் என்பது தெரியும், என பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் அதே தொண்டர் வாக்குவாதம் செய்வது போல் பேசியதற்கு ஆத்திரமடைந்தார் முதல்வர் பழனிசாமி. இதனால் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அத்தொண்டரை காவல் துறையினர் பிரச்சாரக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினர்.

அடுத்த செய்தி