ஆப்நகரம்

குளித்தலை சட்டமன்றம் தொகுதி: வாக்குச்சாவடி மையங்களின் நிலை என்ன?

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் பார்வையிட்டார்.

Samayam Tamil 5 Apr 2021, 8:07 pm
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த தேவையான பொருட்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் இருந்ததை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரசாந்த் மு. வடநேரே இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Samayam Tamil குளித்தலை


மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவின் போது பயன்படுத்த தேவையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திற்கும் வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான கையுறைகள், வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முகக்கவசங்கள் , சானிடைசர்கள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மண்டல அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மண்டல அலுவலர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

திட்டமிட்டபடி 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடக்கும் - சத்யபிரத சாகு

முன்னதாக குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான், குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி