ஆப்நகரம்

உதய சூரியனுக்கு ஓட்டு சேகரித்த சீமான்..! திருவொற்றியூரில் சலசலப்பு

சீமான் பிரச்சாரத்தில் கட்சி சின்னத்தை மாற்றி கூறியதால் தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 2 Apr 2021, 5:21 pm
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இரண்டாவது முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் ஆண்கள் 117 , பெண்கள் 117 என சம வேட்பாளர்களாக காலம் இறங்குகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த முறை கடலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
Samayam Tamil seeman


இந்த முறை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு தமது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரும் சீமான் திமுக மற்றும் பாஜக கட்சிகளை தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில், தான் போட்டியிடவுள்ள திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் நேற்றிரவு அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, '' பெருங்கனவோடு நிற்கும் எங்கள் பிள்ளைகளுக்கு உதய சூரியன் சின்னத்துக்கு என்று கூறிவிட்டு பின்னர் விவசாயி சின்னம் என்று மாற்றி சமாளித்தார். அதனை சுதாரித்துக்கொண்ட அங்கிருந்தவர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். மேடை பேச்சுக்களில் சீமான் தனி இடத்தை கொண்டவர் என்று பிற கட்சிகளை சாந்தவர்களும், பொதுமக்களும் நினைப்பதுண்டு.

நோ சொன்ன கமல்... ஓகே சொன்ன ராதிகா..!

இந்நிலையில், திமுகவை பிரதான எதிரியாக பார்க்கும் சீமான் வாக்கு சேகரிப்பின்போது உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று தவறுதலாக பேசியது கவனம் பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி முதல் முறையாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிட்டு 1.08 சதவீதம் வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,497 வாக்குகளையே பெற்றிருந்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை 3.87 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி