ஆப்நகரம்

ஜெயிக்கிறது ரொம்ப ஈஸிங்க: கோவில்பட்டியில் தினகரன் போட்ட கணக்கு!

கோவில்பட்டி தொகுதியில் தினகரனின் வெற்றிக்காக கட்சியினர் வகுத்துள்ள வியூகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Mar 2021, 8:28 am
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் தொகுதியில் அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, வெற்றிக்காக வகுத்த வியூகம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் எஸ்.பி.மாணிக்க ராஜா பேசியுள்ளார்.
Samayam Tamil strategy devised by ammk for dhinakaran victory in the kovilpatti constituency
ஜெயிக்கிறது ரொம்ப ஈஸிங்க: கோவில்பட்டியில் தினகரன் போட்ட கணக்கு!


நட்சத்திர தொகுதியான கோவில்பட்டி

சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதால் தினகரன் மீண்டும் அதே தொகுதியிலோ அல்லது டெல்டா மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவில்பட்டி தொகுதியில் களமிறங்கி கவனம் பெற்றுள்ளார். அமமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடுவதால் கோவில்பட்டி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

கோவில்பட்டிக்கு அழைத்து வந்த மாணிக்க ராஜா

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் சென்னையின் ஐந்து தொகுதிகள்!

கோவில்பட்டியை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் எஸ்.பி.மாணிக்கராஜா தான் என தினகரனே கூறியுள்ளார். கயத்தார் அமமுக ஒன்றிய சேர்மனான மாணிக்கராஜா ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். இவருக்கு கயத்தார், கடம்பூர், கழுகுமலை, கோவில்பட்டி வட்டாரங்களில் செல்வாக்கு உள்ளது. தென் மாவட்டங்களில் அமமுகவை பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். தென் மண்டல தளபதி எனவும் மாணிக்க ராஜாவை தினகரன் குறிப்பிட்டுள்ள நிலையில் தொகுதி நிலவரம், கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை குறித்து மாணிக்க ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அடேயப்பா, இவ்வளவு நிர்வாகிகளா?

“மக்களவைத் தேர்தலின் போது கடைசி நேரத்தில் சின்னம் பெற்று சுயேச்சையாக களமிறங்கினோம், அப்போது பெரியளவில் கட்சியை கீழ்மட்டத்தில் கட்டவில்லை. பிறந்த குழந்தை போல்தான் தேர்தலை சந்தித்தோம். 6 சதவீத வாக்குகளைப் பெற்றோம். அதன்பின்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 16 சதவீதம் வாக்குகள் பெற்றோம். அதிமுகவின் வாக்குகள் பி கட்சியில் அனைத்து பகுதிகளிலும் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை வழங்கினோம். உதாரணத்துக்கு கோவில்பட்டி தொகுதியில் மட்டும் 9000 பேருக்கு பொறுப்புகள் வழங்கியுள்ளோம். இவர்கள் ஆளுக்கு 5, 6 வாக்குகள் வாங்கிக் கொடுத்தாலே ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் வரை வாக்குகள் பெற முடியும். மும்முனைப் போட்டி நிலவுவதால் இந்த அளவு வாக்குகள் வந்தாலே வெற்றி பெற்றுவிட முடியும்” என்று கூறினார்.

அமமுகவின் தேர்தல் வியூகம்!

2016 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கடம்பூர் ராஜு 64,514 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் 64,086 வாக்குகள் பெற்று 429 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 28,512 வாக்குகள் பெற்றது. இம்முறை மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தினகரன் பக்கம் நிற்கிறது. தொகுதியில் தேவர், நாயக்கர், நாடார், தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்குகள், கணிசமாக உள்ளன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் தேவர் சமூக வாக்குகளே 60000க்கு மேல் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த வாக்குகளை தினகரன் மற்றும் மாணிக்கராஜா டீம் அறுவடை செய்ய வியூகம் அமைத்துள்ளது. மேலும் விஜயகாந்த் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் நாயக்கர் சமூக வாக்குகளையும் பெற முடியும் என கூறுகின்றனர்.

அதிமுக மட்டுமல்ல, திமுக வாக்குகளையும் பிரிப்போம்!

அமைச்சர்கள் நடத்தும் ரகசிய சர்வே: வியூகத்தை மாற்ற வேண்டிய நேரம்!

தமிழ்நாடு முழுவதும் அதிமுக வாக்குகளை தினகரனின் அமமுக பிரிக்கும் என கூறப்படுகிறது. இது திமுகவுக்கு சாதகமாக அமையும் நிலையும் உருவாகியுள்ளது. ஆனால் பாஜக எதிர்ப்பில் தினகரன் உறுதியாக இருப்பதால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்துவந்த சிறுபான்மையினர் வாக்குகளை அமமுக பிரிக்கும் என கூறுகிறார் மாணிக்க ராஜா. தமிழ்நாட்டில் திமுக இதுவரை வெற்றியே பெறாத தொகுதிகள் 4 உள்ளன. அதில் ஒன்று கோவில்பட்டி. அந்த வகையில் கோவில்பட்டியில் அதிமுகவையும், திமுகவையும் வீழ்த்தி தினகரன் வெற்றிபெறுவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கோவில்பட்டி அமமுகவினர்.

அடுத்த செய்தி