ஆப்நகரம்

மே 1 ஊரடங்கு தேவையில்லை: தமிழக அரசு அறிவிப்பு!

மே 1ஆம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Apr 2021, 1:52 pm
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளதால் மே 1, 2 ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கு விதிப்பது தொடர்பாக முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
Samayam Tamil sunday lockdown


இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மே 1ஆம் தேதி முழு ஊரடங்கு விதிக்க தேவையில்லை என்று கூறியுள்ளது. ஏற்கெனவே மே 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மே 1ஆம் தேதி மே தினம் என்பதால் அரசு விடுமுறை என்பதால் ஊரடங்குக்கு அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆலோசனை நடத்தும் அரசு!
மேலும் மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதால் ஊரடங்கு அறிவிப்பு அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களை அனுமதிப்பது குறித்து விளக்களிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

இந்நிலையில் தமிழகத்தில் மே 1ஆம் தேதி முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், மே 2ஆம் தேதி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி