ஆப்நகரம்

'பிரேமலதாவை நெகிழ வைத்த தினகரன்', வலுவாகும் கூட்டணி அஸ்திவாரம்!

தேமுதிக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய டிடிவி தினகரன் பிரத்யேக வாகனத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 18 Mar 2021, 5:35 pm
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்துகொண்டது. அதனையடுத்து, தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியது அமமுக. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், '' நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கடைசி நிமிடம் வரை முதலமைச்சரிடம் கேட்டோம்.
Samayam Tamil file pic


ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு பக்குவம் எங்கள் யாருக்கும் கிடையாது. கடைசி வரை 13 மட்டுமே என்று இருந்ததால் கனத்த இதயத்துடன் கூட்டணியை விட்டு வெளியேறினோம். டிடிவி தினகரனை எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கிறோம்'' என கூறினார்.

மேலும், அதிமுகவை பொது எதிரியாக பார்க்கும் தேமுதிக - அமமுக இரண்டு கட்சிகளும் அதிமுகவை தோற்கடிப்பதான ஒற்றை இலக்குடன் தேர்தலை சந்திக்கின்றன. மூத்த கட்சியாக தேமுதிக இருந்தாலும், அமமுக தலைமையில் கூட்டணியை அமைத்திருப்பது பல தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஊரடங்கு அறிவிப்பா? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

ஆனால், தேர்தல் செலவை கவனத்தில்கொண்டு கூட்டணி அமைக்கும் சூழல் தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்வதற்கு டிடிவி தினகரன் பிரத்யேக வண்டியை வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், கூட்டணி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், நம்பி வந்த கட்சியை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி