ஆப்நகரம்

தேர்தலுக்கு விநியோகிக்க இருந்த 1. 21 கோடி பணம் பறிமுதல்

தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பணப் பட்டுவாடா நடைபெறுவது வாடிக்கை ஆகி விட்டது. இதனை முற்றிலும் ஒழிக்க தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது.

Samayam Tamil 26 Mar 2019, 5:43 pm
தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பணப் பட்டுவாடா நடைபெறுவது வாடிக்கை ஆகி விட்டது. இதனை முற்றிலும் ஒழிக்க தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது.
Samayam Tamil money


கோயமுத்தூரில் தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு லஞ்சமாக கொடுக்க இருந்த 1.21 கோடி பணம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. பணத்தை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணத்தை வேனில் எடுத்து வந்த நபர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இந்த பணம் ஏடிஎம்-ல் போட எடுத்துச் செல்கிறோம் என பிடிபட்டவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினர்.

இதேபோல கோவையின் மற்றொரு பகுதியான மேட்டுப்பாளையத்தில் ரூ. 18 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இரண்டுநாட்களுக்கு முன்னர்தான் சேலத்தில் 1.83 கோடி கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிமையாளர் என யாரும் முன்வரவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி