ஆப்நகரம்

4 தொகுதி இடைத்தோ்தல்: அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 84.28% வாக்குகள் பதிவு

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதி இடைத்தே்ாதல்கள் இன்று நடைபெற்ற நிலையில், சராசரியாக 77.62 சதவிகித வாக்குகள் பதிவாக உள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 19 May 2019, 11:41 pm
மக்களவைத் தோ்தலுக்கான 7வது கட்ட வாக்குப்பதிவுடன் சோ்த்து தமிழகத்தில் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், இந்த தோ்தலில் 77.62 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
Samayam Tamil Voter


மக்களவைத் தோ்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

மேலும் காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூா், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் சராசரியாக 77.62 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொகுதி வாரியாக, சூலூா் தொகுதியில் 79.41%, அரவக்குறிச்சி – 84.28%, திருப்பரங்குன்றம் – 74.17%, ஒட்டப்பிடாரம் – 72.61% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.

மக்களவை, சட்டமன்ற இடைத் தோ்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி