ஆப்நகரம்

4 தொகுதி இடைத்தோ்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்

மே 19ம் தேதி நடைபெறவுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தோ்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்.

Samayam Tamil 29 Apr 2019, 9:00 am
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூா் ஆகிய 4 தொகுதி இடைத்தோ்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
Samayam Tamil Sathya Pratha thahoo


தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கடந்த 18ம் தேதி மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இடைத்தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் மனுத்தாக்கல் செய்ய இன்று இறுதி நாள். இந்நிலையில் அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் இன்று மனுத்தாக்கல் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தலில் போட்டியிட தற்போது வரை 98 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற மே 2ம் தேதி இறுதி நாளாகும்.

அடுத்த செய்தி