ஆப்நகரம்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்த அதிமுக!

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, அதிமுக சார்பில் விருப்ப மனு பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2019, 7:05 pm
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ADMK Office


அவை சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் ஆகும். இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

வரும் 21ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம். இதனை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.25,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

அதனை பூர்த்தி செய்து, அன்றைய தினமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியானது.

அதன்படி, சூலூரில் நா.பழனிசாமி, அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் சரவணன், ஒட்டப்பிடாரம்(தனி) சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அடுத்த செய்தி