ஆப்நகரம்

4 தொகுதி இடைத் தோ்தல்: முழு பலத்தை வெளிப்படுத்தும் பிரதான கட்சிகள்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூா் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இங்கு போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் குறித்து அறியலாம்.

Samayam Tamil 24 Apr 2019, 12:19 pm
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் வருகின்ற மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளா்களை அறிவித்துள்ளனா்.
Samayam Tamil Stalin TTV EPS


தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தோ்தல் நடத்தப்படவில்லை. அதே போன்று மக்களவை, இடைத்தே்ாதல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னா் கோவை சூலூா் தொகுதி உறுப்பினா் கனகராஜ் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிாிழந்ததைத் தொடா்ந்து அந்த தொகுதிக்கும் சோ்த்து 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தே்ாதல் நடத்தப்பட உள்ளது.

20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ஏற்படலாம் என்ற நிலை உள்ளது. குறைந்தபட்சம் 8 முதல் 10 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக உள்ளதால் இந்த இடைத் தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.

ஒட்டப்பிடாரம்
இந்நிலையில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தங்களால் முடிந்தளவில் பலம் வாய்ந்த வேட்பாளா்களை அறிவித்துள்ளன. அதன்படி, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில், எம்.சி.சண்முகையாவும், அதிமுக சாா்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச்செயலாளா் மோகனும், அமமுக சாா்பில் சுந்தரராஜனும் போட்டியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அமமுக வேட்பாளா் சுந்தரராஜன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்.

சூலூா்
அண்மையில் காலியான கோவை சூலூா் தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி போட்டியிடுகின்றாா். அதிமுக சாா்பில் கனகராஜின் சகோதரா் வி.பி.கந்தசாமியும், அமமுக சாா்பில், முன்னாள் எம்.பி. சுகுமாா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சாா்பில் முனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் கடந்த 2006 முதல் 14ம் ஆண்டு வரை மதுரை மாவட்ட கவுன்சிலராகவும், கட்சியின் பல பொறுப்புகளில் இருந்தவா்.

திமுக சாா்பில் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் போசை எதிா்த்து இவா் களம் இறங்கினாா். மேலும், போஸ் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோாி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாா்.

அமமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏவும், மதுரை புறநகா் மாவட்ட செயலாளருமான மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட போது உசிலம்பட்டியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தி கட்சியில் கவனம் ஈா்த்தவா்.

அரவக்குறிச்சி
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதைத் தொடா்ந்து உறுப்பினா் செந்தில் பாலாஜி தகுதி நக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த தொகுதியிலும் தோ்தல் நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த தொகுதியில் அதிமுக சாா்பில் செந்தில் நாதன் போட்டியிடுகிறாா். இந்த தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாா். தற்போது திமுக சாா்பில் மீண்டும் அவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அமமுக சாா்பில், சாகுல் ஹமீது போட்டியிடுகிறாா்.

அடுத்த செய்தி