ஆப்நகரம்

பொங்கல் பரிசில் மாம்பழம் கொடுத்த ஜெயலலிதா! இது எப்போ? அடிச்சு விட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

பிரச்சாரத்தின் போது, மாம்பழத்தைச் சேர்த்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 May 2019, 5:38 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil dindigul-srinivasan


மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் 4 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பரிசாக பச்சரிசி உடன் மாம்பழம் வழங்கியதாக தவறாக குறிப்பிட்டார். ஏனெனில் பச்சரிசி உடன் வெல்லம் கொடுக்கப்பட்டது தான் உண்மை. இதைக் கேட்ட மக்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சியில் பொங்கல் பரிசு உடன் ரூ.100 வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொங்கல் பரிசு உடன் ரூ.1000 வழங்கியதாக குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி