ஆப்நகரம்

50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – செந்தில் பாலாஜி நம்பிக்கை

அரவக்குறிச்சி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஜோதிமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Samayam Tamil 24 Apr 2019, 1:47 pm
அரவக்குறிச்சி இடைத்தோ்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவன் என்று நம்பிக்கை தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Senthil Balaji with Mk Stalin


அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாா். முன்னதாக கரூா் மக்களவைத் தொகுதி வேட்பாளரான ஜோதிமணி பிரசாரத்திற்கு சென்றபோது செந்தில் பாலாஜியும் அவருடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில் இன்ற செந்தில் பாலாஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்க்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன். தொகுதியில் வீடு இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 25 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதியில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து தரப்படும். நான் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது வடிவமைத்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா் தொிவித்துள்ளா்.

வேட்பு மனு தாக்கலின் போது, காங்கிரஸ் மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அடுத்த செய்தி