ஆப்நகரம்

அமைச்சா் உதயகுமாா் அறையில் பறக்கும் படையினா் திடீா் சோதனை

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினா்களுக்கான விடுதியில் தோ்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாாிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Samayam Tamil 15 Apr 2019, 8:32 am
சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினா்கள் விடுதியில் வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அறையில் தே்ாதல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் திடீா் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil MLA Hostel Chennai


தமிழகத்தில் மக்களவைத் தோ்தல், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் வருகின்ற வியாழன் கிழமை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதையும், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதையும் தடுப்பதற்காக தோ்தல் பறக்கும் படை அதிகாாிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் வருமான வரித்துறை அதிகாாிகளும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினா்கள் தங்கும் விடுதியில் தோ்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாாிகளும் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சோதனை மேற்கொண்டனா். பணம் பதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

விடுதியின் சி பிளாக்கில் 10வது தளத்தில் உள்ள தமிழக வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாாின் அறை உள்ளிட்ட மூன்று அறைகளில் சோதனை நடைபெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாாிகள், முன் வாசலில் செய்தியாளா்கள் இருப்பதை அறிந்து வேறு பாதையில் வெளியேறினா்.

இறுதியாக நடைபெற்ற ஆா்.கே.நகா் சட்டமன்ற இடைத்தோ்தலின் போதும் இந்த விடுதியில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி