ஆப்நகரம்

கிடைச்சது பரிசுப் பெட்டி; கொண்டாட்டத்தில் அமமுக - முழு பலத்தை காட்ட களமிறங்கும் டிடிவி!

விரைவில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில், அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 8:04 pm
தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் அடங்கும்.
Samayam Tamil TTV Dinakaran


அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி. எனவே அதற்கு நிரந்தர சின்னம் ஒதுக்க முடியாது. டிடிவி தினகரன் தரப்புக்கு தனி தனி சின்னம்தான் தர முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால், அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி விடும் என்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

இதையடுத்து அமமுகவை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையில் டிடிவி தினகரன் ஈடுபட்டார். இதையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் செய்யப்பட்டார்.

இந்த சூழலில் வரும் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அடுத்த செய்தி