ஆப்நகரம்

முதல் தீவிரவாதி ’இந்து’ என சர்ச்சை பேச்சு; கமலுக்கு எதிராக டெல்லியில் வழக்குப்பதிவு!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கமல் ஹாசன் மீது, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 May 2019, 4:24 pm
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சுந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
Samayam Tamil Kamal


இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் இவ்வாறு பேசவில்லை. காந்தி சிலை முன்பு நின்று கொண்டு, நான் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே.

காந்தியின் கொள்ளுப் பேரனாக என்னைக் கருதுகிறேன். அவரது கொலையின் பின்னணி கேட்டு நான் வந்திருக்கிறேன். மூவர்ணக் கொடியில் இருக்கும் நிறங்கள் அப்படியே இருக்கும் இந்தியாவாக நம் நாடு இருக்க வேண்டும்.

அதுவே நல்ல இந்தியர்களின் எண்ணம். நான் ஒரு நல்ல இந்தியன் என்று கூறினார். கமலின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கமலுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மே 16 மதியம் 2 மணிக்கு விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி