ஆப்நகரம்

தஞ்சையில் 3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள குத்துவிளக்கு பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை!

நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் ஆவணம் இல்லாத பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 21 Mar 2019, 6:08 pm
நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் ஆவணம் இல்லாத பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
Samayam Tamil Lamp


தஞ்சையில் 24 பறக்கும் படையினர் 24 நிலையான குழுக்கள் எட்டு வீடியோ கேமரா கொண்ட குழுவினர் அமைத்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணம் இல்லாத பணம் மற்றும் ஆவணங்கள் சுமார் 4 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்துகளை பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணத்தில் உள்ள பாத்திரக்கடைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3,40,000 மதிப்புள்ள குத்துவிளக்கு, ஆலயமணி மற்றும் பித்தளை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பறக்கும் படையினர் விசாரணை செய்த போது 8 பண்டல்களில் கொண்டுவரப்பட்ட நிலையில் 2 பண்டல்களுக்கு மட்டுமே ஆவணம் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட அனைத்து பொருட்களையும் பறக்கும் படை தாசில்தார் சுஜாதா பறிமுதல் செய்து கோட்டாட்சியர் சுரேஷ் அவர்களிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி