ஆப்நகரம்

ஆட்சியை தக்கவைக்க பண விநியோகம் செய்யவுள்ளதா அதிமுக?

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தல் நெருக்கடியால் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க யூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 24 Mar 2019, 10:24 pm
ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தல் நெருக்கடியால் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க யூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
Samayam Tamil money


நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போது, இந்த 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது.

இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் குறைந்தது 9 தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால்தான் எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்தை தக்க வைக்க முடியும் என்ற கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கலக்கத்தில் உள்ள எடப்பாடி அரசு எம்பி தேர்தலில் கவனம் செலுத்துவதை விட 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் எடப்பாடி அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்காததால் அவர், தொகுதியில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை ஒரு பொருட்டாகவே அதிமுக கருதவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்கள் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் அமமுக சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்களுக்கு எம்.பி சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதை பார்க்கும்போது அதிமுக ஆட்சியை தக்க வைக்க டிடிவி மறைமுகமாக உதவுகிறார் என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அதிமுக பண மழை பொழியும் என கூறப்படுகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி