ஆப்நகரம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு: சென்னை உயர்நீதிமன்றம்!

வழக்கை காரணம்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2019, 11:44 am
வழக்கை காரணம்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai high court


கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் சீனிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பதவியேற்புக்கு முன்னரே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, 2016, நவம்பர் 19ம் தேதி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, அதில், அதிமுக சார்பில் ஏகே போஸ் மற்றும் திமுக சார்பில் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏகே போஸ் வெற்றி வெற்றார். இந்த நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரனைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், 18ம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவை தேர்தலுடன் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், இந்த தேர்தலுடன் மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டது. ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் போது, ஏன் இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பின்னர் நடந்தால், ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கை சுட்டிக்காட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரனை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி